Thursday 20 March 2014

BSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . .

 அருமைத்தோழர்களே!நமதுபகுதி,தபால்-தந்திதுறையாக,டெலிகாமாக,BSNL நிறுவன பொதுத் துறை யாக,ஊழியர்கள் விருப்பத்திற்கு எதிராக மாற்றம் செய்த போது BSNL பகுதியில் பணிபுரியும்அனைத்து  ஊழியர்களுக்கும்  விடி வெள்ளியாக மார்ச்-22ல்   விசாகபட்டினத்தில் உருவானது தான் நமது பெருமை
மிகு   BSNL EMPLOYEES UNION அமைப்பாகும்.
  • BSNLEU-உருவானபிறகுதான் விரிந்து  பரந்த அதிகாரிகள்+ஊழியர்கள் ஒற்றுமை உருவாக்கப்பட்டது.
  •  BSNLEU - உருவானபிறகுதான் பங்கு விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி தடுக்கப்பட்டுள்ளது.
  •  BSNLEU - உருவானபிறகுதான் 1 லட்சம் ஊழியர்கள் VRS என்ற அரசின் ஊழியர் விரோத திட்டத்தை தடுக்கமுடிந்துள்ளது.
  • BSNLEU - உருவானபிறகுதான் புதிய பதவி உயர்வு திட்டம் உருவாக்கப் பட்டு அமல்படுத்தப்பட்டது.
  • BSNLEU - உருவானபிறகுதான் புதிய சம்பள மாற்றம் உருவாக்கப்பட்டு 30% உயர்வு அமல்படுத்தப்பட்டது.....
 இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த நமது சங்கத்தின் அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில்22.03.2014 அன்று, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சங்க கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய்,நமது மதுரை மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது.
மதுரை நகரில் 22.03.2014 கொடிஎற்ற நிகழ்ச்சி. . . . .

  • காலை 9.30 மணிக்கு LEV-4 & CTMX
  • காலை 9.45 மணிக்கு EMM & NCR
  • காலை 10.00 மணிக்கு VLM
  • காலை 10.15 மணிக்கு TVS Nagar
  • காலை 10.30 மணிக்கு அழகப்பாநகர் 
  • காலை 10.45 மணிக்கு பொன்மேனி 
  • காலை 11.00 மணிக்கு எல்லீஸ் நகர் 
  • காலை 11.15 மணிக்கு  NJR
இந் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள்.சி .செல்வின் சத்தியராஜ்,எஸ்.சூரியன்,ஆர்.ரவிச்சந்திரன்,வி.சுப்புராயலு,எ.நெடுஞ்செழியன்,எஸ்.மானுவேல் பால்ராஜ்,எஸ்.மாயாண்டி,என்.செல்வம் ஆகியோர் பங்கு பெறுவார்கள்.
---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன்...D/S-BSNLEU

No comments: