Saturday 22 October 2016

27.10.2016 ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்.

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில்  மத்திய அரசின் துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை  எதிர்த்து 27.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம் . . .
நாடு முழுவதுமுள்ள 65000 செல் கோபுரங்களை தனியாகப்பிரித்து 20000 கோடி மதிப்பீட்டில்..
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து 
27/10/2016 BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக நாடு தழுவியஆர்ப்பாட்டம்
இன்றைய நிலைமையில் இந்தியா எங்கும் உள்ள நமது BSNL டவர்களை மற்ற நிறுவனங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்காக பகிர்ந்து கொள்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். எந்த முகாந்திரமும் இல்லாமல் துணை டவர் கம்பெனி ஆக மாற்ற காரணம் என்ன ?  இதன் மூலம் டவர் மீதுள்ள நமது பிடிமானம் போய்விடும். இது நமது BSNL நிறுவனத்தின் பொருளாதாரம் மேலும் சீர்கெடும் நிலைமைக்கு தள்ளி விடும்.  கொஞ்சம் கொஞ்சமாக தரைவழி சேவை மட்டுமே நம்மிடம் இருக்கின்ற நிலைமைக்கு போய்விடும். இது நமது BSNL நிறுவனத்தை படுகுழியில் தள்ளும் நரேந்திர மோடி அரசின் திட்டமாகும். இதனை நாம் முறியடிக்க வேண்டும்BSNL  என்னும் பெரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும்...தனி நிறுவன  துணை நிறுவன முயற்சியைத் தடுப்போம்...ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே என, அறைகூவி அழைக்கின்றோம்.

No comments: